Saturday, June 9, 2012

இன்றைய ஹைக்கூ - 2 ----- 09 /06 /2012

இன்றைய ஹைக்கூ - 2 
09 /06 /2012 
 
 
பாமரம்..!!
குலை குலையாய்
காய்த்துக் குலுங்கும்
அந்த மாமரத்துக்கு
தெரிந்ததே இல்லை..
தன் கனியின் இனிப்பு...!!!
 
********
 
மயக்கம்..!!
நிலமாய் நான்..
நீராய் நீ...
உன்னை அணைப்பது
நானா
என்னை கரைப்பது
நீயா
என்று உணராமலே..!!!

2 comments:

  1. நல்ல வரிகள் இரண்டுமே...
    நல்ல சிந்தனை இரண்டுமே
    ஆழ்ந்த தத்த்வார்த்தப் பார்வை சித்தர் மரபு
    அதன் நவீன பாணி கவிதைகளின் வரிசையில் இவை.

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. ரொம்பவும் அருமையான வரிகள் :
    உன்னை அணைப்பது நானா
    என்னை கரைப்பது நீயா
    என்று உணராமலே..!!!
    முருகன் சுப்பராயன்

    ReplyDelete