இன்றைய ஹைக்கூ - 2
09 /06 /2012
பாமரம்..!!
குலை குலையாய்
காய்த்துக் குலுங்கும்
அந்த மாமரத்துக்கு
தெரிந்ததே இல்லை..
தன் கனியின் இனிப்பு...!!!
********
மயக்கம்..!!
நிலமாய் நான்..
நீராய் நீ...
உன்னை அணைப்பது
நானா
என்னை கரைப்பது
நீயா
என்று உணராமலே..!!!
நல்ல வரிகள் இரண்டுமே...
ReplyDeleteநல்ல சிந்தனை இரண்டுமே
ஆழ்ந்த தத்த்வார்த்தப் பார்வை சித்தர் மரபு
அதன் நவீன பாணி கவிதைகளின் வரிசையில் இவை.
எஸ் வி வேணுகோபாலன்
ரொம்பவும் அருமையான வரிகள் :
ReplyDeleteஉன்னை அணைப்பது நானா
என்னை கரைப்பது நீயா
என்று உணராமலே..!!!
முருகன் சுப்பராயன்