Saturday, June 2, 2012

இசை தேவனுக்கு இன்று பிறந்த நாள்..!

இசை தேவனுக்கு இன்று  பிறந்த நாள்..!

பசிப் பிணி போக்க இசைப் பணி நாடினாய்...
கசையடி மத்தியில் கனிந்தே பாடினாய்...
வசையடி தந்து வருத்தியோர்க் கெல்லாம்
இசையிலே பதிலடி எடுத்து வீசினாய்...
தோல் நிறம் நினைந்து துவண்டவர் கோடி..
பால் நிறம் பார்த்தாலே பணிந்தவர் கோடி..
குலம் சுட்டிக் கூவிடும் கோட்டான்கள் முன்னே
கொலையுண்டு வீழ்ந்து மடிந்தவர் கோடி...
கலையினில் சிறந்தும் கல்வியில் சிறந்தும்..
நிலை தடுமாறியே நின்றவர் திருந்தவே...
இசையினில் சிறந்து இமயம் தொட்டவன்
இளையராஜா நீ வாழ்க வாழ்கவே....!!
-இராஜேஸ்வரன். ஆ

No comments:

Post a Comment