Tuesday, March 26, 2013

ஆன்மீகம்



ஆன்மீகம் - மூடமா?

இது பல ஆண்டு காலமாக நடந்து வரும் விவாதம்- கடவுள் உண்டா? இல்லையா? கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கைதானா ?  ஆன்மீக உணர்வு நல்லதா,  தேவையற்றதா?   கடவுள் - ஆன்மீகத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் எப்போது விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  

ஒரு வேளை  அறிவியலின் மூலம் பிறந்த ஒருவனை என்றுமே அழியாமல் வைத்திருக்கும் நிலை எதிர் காலத்தில் வந்தால்... வரலாம் யார் கண்டது? செயற்கை முறையில் உயிரியல் தொழில் நுட்பம் மூலம் செயற்கை மூளையை உருவாக்கி செயற்கை உடலை உருவாக்கி இருக்கின்ற மனிதனின் தேவைப்பட்ட நினைவுகளை புதிய 'அவதாரத்துக்கு' மாற்றும் நிலை உருவாகுமானால் கடவுளுக்கான தேவை அற்றுப் போகலாம்.

அன்று வரை கடவுள் இருப்பார், ஆன்மிகம் இருக்கும்,  நம்பிக்கை இருக்கும்.

சரி ஆன்மீகத்தின் ஆதார பொருள் என்ன?   ஆன்மீகத்தில் நம்பிக்கையும், ஈர்ப்பும், ஆன்மிகம் தேவை என்ற உணர்வும் கொண்ட நானே சிறிது பட்டவர்த்தனமாக சொல்லவேண்டுமென்றால்  ஒரே ஒரு காரணம்.....

"எதிர் கால் விளைவுகளின் மீது நம்பிக்கையின்மை".

ஆம் - முரணானதுதான் ஆனால் உண்மை "நம்பிக்கையின்மை" தான் இந்த வகை நம்பிக்கைக்கே  ஆதார நாதம். எப்போது பொதுவான நம்பிக்கை குறைகிறதோ, அங்கு அந்த இழந்த நம்பிக்கையின் இடத்தை நிரப்ப இறை நம்பிக்கை வந்து நிற்கிறது.

பகுத்தறிவுவாதிகள் இதற்கு 'மூட நம்பிக்கை' என்றோ 'குருட்டு நம்பிக்கை' என்றோ பெயரிடலாம்.  ஆனால் நம்பிக்கை என்றாலே 'குருட்டுத் தனமானதுதான்'.  பழைய நிகழுவுகளின் அடிப்படையில் இவ்வாறு நடைபெறும் என்று 'நம்பி' இறங்கலாமே தவிர,  100% உறுதியாக இதுதான் நடக்கும் என்று கூற முடியாது.  கூறினால் அது ஆதார்மற்றதே.

சரி ஒரு தர்க்க வாதத்துக்காக ஒருவர் சொல்கிறார் "நான் அறிவியல் பூர்வமாக சொல்கிறேன்- 99% சதவீதம் இது இவாருதான் நடக்கும்".  உடனடியாக என் மனதில் இந்த கேள்விதான் எழும் -  சரி அந்த 99% சதவீதத்துக்கான வாய்ப்பு 1% ஆகவும்,  நடைபெறாமல் இருக்கக் கூடிய 1% சதவீததுக்கான வாய்ப்பு 99% ஆகிவிடாது என்று கூற முடியுமா?"  -   நிச்சயம் யாராலும் கூறவே முடியாது.

எனவே uncertainty  என்று சொல்லப் படக்கூடிய நிச்சயமற்ற தன்மையும், அதன் மூலம் நாம் பெரும் நம்பிக்கையின்மையும் இருக்கும் வரை கடவுள் நம்பிக்கை இருந்தே தீரும். 

ஆதாரமற்ற நம்பிக்கையை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் கொண்டிருக்கிறார்களே 'தன்னம்பிக்கை'  அது எந்த வகையில் உறுதியானது?  நீங்கள் உங்கள் வண்டியை எடுத்து ரோட்டில் ஓட்டும்போது வேண்டுமானால் உங்கள் தன்னம்பிக்கை உதவலாம்.  ஆனால் எதிராளி ஓட்டத் தெரிந்தவனா, ஓட்டத் தெரிந்தாலும் உங்களை இடிக்கி மாட்டானா? இடித்தாலும் அடிபடாதா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க உங்கள் 'தன்னம்பிக்கை' போதாது.  

எனவே வண்டி ஓட்டுவது உங்கள் தன்னம்பிக்கையில்; ஆனால் போக வேண்டிய இடத்திற்கு விபத்தில்லாமல் போய் சேருவீர்கள் என்ற நம்பிக்கை கொள்வது - "ஒரு வகை குருட்டு நம்பிக்கையே" - அந்த நம்பிக்கைக்கு ஆன்மீக வாதிகள் இட்டிருக்கும் பெயர் - "கடவுள் நம்பிக்கை" 


..... இன்னும் தொடருவோம்.....


(Please excuse typo errors)

1 comment:

  1. மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்...நல்ல பதிவு...தொடரட்டும்..

    ReplyDelete