Saturday, March 30, 2013

ஆன்மீகம்


ஆன்மீக நியதிகள் உருவான விதம்:

என்னுடைய சிறு அனுபவமும், விவாத அறிவும் சொல்லும் உண்மை - பெரும்பாலான ஆன்மீக நியதிகள் வளமான, வலிமையான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப் பட்டவையே.  நாளாவட்டத்தில் உண்மையான நியதி முறைகள் வெறும் வழி முறைகளின் (சாங்கியங்கள்) உருவமாக மாறி விட்டன என்பதே உண்மை.

சிறு உதாரணம் - சிறு நீர் கழிக்கும் ஒரு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கலாம்.  என்னுடன் வேலை பார்த்த ஒரு மிக ஆச்சாரமான பிராமண குலம் என்று அழைக்கப்படும் குடும்பத்திலிருந்து (எனக்கு வர்ண பாகுபாடுகளில் நம்பிக்கை இல்லாததால்,  எந்த ஒரு வர்ண / சாதி பாகுபாட்டையும் - "என்றழைக்கப்படக்கூடிய- socalled " என்ற அடைமொழியோடு குறிப்பிடவே விரும்புகிறேன். இந்த அடைமொழி எங்காவது விடுபட்டுப் போனால் அது தவறி நடந்த ஒரு பிழையே.  எனவே எந்த ஒரு இனத்தின் குறியீடோ, சாதி வர்ண குறியீடோ இருப்பின் அதனுடன் socalled  சேர்த்து படிக்க வேண்டுகிறேன்).  ஒரு நண்பன் , தன்னுடைய பூணூலை சிறுநீர் கழிக்கும் இடத்தில் நுழைந்தவுடனே காதில் தூக்கி மாட்டிக் கொள்வான்.  பிறகு சிறுநீர் கழித்து முடித்து விட்டு கை கால் சுத்தம் செய்த பின் பழையபடி தோளில் படருமாறு விட்டு செல்வான்.  

அவனிடம் ஏன் அப்படி செய்கிறான் என்று கேட்டேன்.  "தெரியாது, என் முன்னோர்கள் இப்படி செய்யச் சொல்லி ஆசாரத்தை கடை பிடிக்க சொன்னார்கள், செய்கிறேன்".  யோசித்துப் பார்த்த பொது பூணூலின் அமைப்பும் நீளமும் பார்த்தால், சிறிது கவனம் தவறினால் சிரிநீறாலோ, சுத்தமற்ற கழிப்பிடத்தினாலோ மாசு படுவதற்கான வாய்ப்பு அதிகம். இடுப்பை விட சிறிது இறங்கியே அதன் நீளம் அமையும்.  எனவே, ஒவ்வொரு முறையும், அதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.  சுலப வழி என்ன?  பேசாமல் தூக்கி காதில் மாட்டி விடு.  குறைந்த பட்சம் 5 அங்குலம் இருக்கிற இடத்திலிருந்து உயரே ஏறிவிடும்,  பூணூல் மாசு படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைக்கப் படும்.

பெரும்பாலான கோட்பாடுகளை லட்சக் கணக்கான மக்களிடம் விளக்கி அவற்றை ஏற்றுக் கொள்ள செய்வது சிரமம் என்பதால் தொடங்கப்பட்ட வழிமுறைதான் சம்பிரதாயம் - மீறினால் சாமி கண்ணைக் குத்தும் என்ற மிரட்டல் .

தோப்புக் கரணம் போடுவதையும், நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்குவதையும் எடுத்துக் கொள்ளலாம். உடற் பயிற்சி எந்த அளவு முக்கியம் என்பதை விளக்க எந்த ஆன்மீகமும் தேவையில்லை,  சாதாரண வாழ்வியல் அறிவே போதும். இருந்தாலும்,  ஆன்மிகம் என்ற ஊடகத்தின் மூலம் அதை வெளிகொனரும்போது அதன் சென்றடைதல் (reach )  நன்றாக இருக்கின்றது.  தோப்புக்கரணம் என்பது "பஸ்கி" ;  நெடுஞ்சாண்கிடை நமஸ்காரம் என்பது "தண்டால்"  அவ்வளவுதான்.  கோவில் சென்றார்ப் போல் ஆயிற்று.  உடற்பயிற்சியும் முடிந்தது.  கோவில் வெளிப் பிரகாரத்தை வலம் வருதல் - நடை பயிற்சி. திருவண்ணாமலை சுற்றி வருதல் நெடும் நடை பயிற்சி. 

நான் வேதாரண்யம், திருவாரூர் போன்ற ஊர்களில் பெரிய கோவில்களுக்கு செல்லும்போது அங்கு நடக்கும் பூஜை செய்வதற்கு முன்பான சில தயாரிப்புகள் preparations பொறுமையை சோதிக்கும்.  முதலில் நீரை ஊற்றி கடவுள் சிலைய சுத்தம் செய்வர், பின் அலங்காரத்திற்காக திரையை மூடிவிட்டு 15 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வைப்பார்கள்.  காத்திருந்தால் - தீப ஆராதனை பார்க்கலாம்.  பொறுமையை கடைபிடிப்பதை விட மிகப் பெரிய மனப் பயிற்சி ஏதுமில்லை. தியானம் செய்யுங்கள், "குண்டலினி" சக்தியை நெற்றிக்கு கொண்டு வருவதாக ஏதாவது சொல்லுங்கள் ஆனால் இவை எதுவும் உங்கள் "பொறுமையை' அதிகப்படுத்தவில்லை என்றால், உங்கள் மனம் வலிமையற்றதே.

அவ்வாறு,பொறுமையை உங்களுக்கு சுற்றி வளைத்து வழங்குவது இந்த மாதிரி சம்பிரதாயம், அலங்காரம் யாவும். ஒரு பஸ்சுக்காக காத்திருக்கிறீர்கள் - நேரம் செல்ல செல்ல பொறுமை குறைகிறது; கோபம் அதிகரிக்கிறது; உங்கள் உட்சுரப்பிகள் (endocrine சிஸ்டம் - glands ) தாறுமாறாக வேலை செய்து, உங்கள் ஹார்மோன்கள் காரணமாக இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்கள் உண்டாகி நாளடைவில் நோய் உருவாக வழிவகுக்கின்றன. பொறுமை இருந்தால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  பஸ் நிறுத்தத்தை கோவிலாக ; பஸ்ஸை கடவுள் சிலையாக, காத்திருக்கும் நேரத்தை அலங்கார நேரமாக உங்களை பக்தனாக உருவகப் படுத்துங்கள் -  ஹார்மோன் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் -உடல் நலம், மன நலம் பாது காக்கப் படும். 


.... இன்னும் தொடருவோம்.....

(Please excuse typo errors)






















No comments:

Post a Comment