Tuesday, November 8, 2011

உலகத்தமிழருடன் உறவுப்பாலம்

உலகத் தமிழ் அன்பர்களே...


நான் என்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். வேதாரண்யம் என்ற கடற்கரை ஊரில் பிறந்தவன். தற்போது சென்னை ஒரு அரசுடமையாக்கப் பட்ட வங்கியில் முது நிலை மேலாளராக பணி செய்து கொண்டிருக்கிறேன்.


ஆரம்ப கால கட்டங்களில் ௧௯௯0 களில் தமிழ் மோகம் கொண்டு அலைந்தவன், கால மாற்றங்களில் சிறிது நாள் தமிழை விட்டு விலகி இருக்க வேண்டியவனானேன். வெளி நாடு சென்று பொருள் தேடும் அன்பர்களின் நிலை போன்றதுதான் என்னுடையதும். அவர்கள் புலம் பெயர்ந்துள்ளனர் ; நான் இடம் பெயரவில்லை, சிறிது எழுத்தும் எண்ணமும் சிதறி இருந்தேன்.


மீண்டும் வந்திருக்கிறேன், தமிழ்க் குடில் என்ற தாய் வீடு தேடி.


மெய்யெழுத்து என்று இந்த விலைப் பூவிற்கு பெயர் வைத்தது கூட, உணர்வுகளை உண்மையிலிருந்து பிறழாமல் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆசையில்தான்.


நான் இலக்கிய ஆர்வலனே ஆன போதும், முழு நேர இலக்கியவாதி அல்ல என்பதால், சில நேரங்களில் சில தவறுகள், வேகம் குறைவான வீச்சுகள் இருக்கலாம்; இருப்பின் முன்கூட்டியே பொது மன்னிப்புக்கு விண்ணப்பித்து விடுகிறேன்.


இந்த வலைப்பூ உங்களுக்கும் எனக்கும் உறவுப் பாலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


என்றும் வளரும் அன்புடன்,

இராஜேஸ்வரன். ஆ







No comments:

Post a Comment