Thursday, November 17, 2011

உலகச் சுருக்கி

என் மடியில் நீ
படுத்திருக்கும்போதேல்லாம்
என்னென்னவோ
சிந்திந்துள்ளேன்...!

எதை எதையோ கிறுக்கியுள்ளேன்
எண்ணங்களை வாகனமாக்கி
எங்கெல்லாமோ சுற்றி
வந்திருக்கிறேன்....
இரண்டு நாள் பயண
தூரத்தில்
இருப்பவர்களைஎல்லாம்
இமைப்பொழுதில்
எட்டித் தொட்டிருக்கிறேன்...!

ஒளிக்கில்லா வேகம்
உன்னால்தான்
என் எழுத்துக்கு கிடைத்தது...
உலக இலக்கியத்திலிருந்து
உள்ளூர் அரசியல் வரை
என் படுக்கையறைக்கு
இழுத்து வந்தவன் நீ..!

உன்னை வைத்தே
எத்தனையோ விஷயங்கள் மீது
எழுதிச் சலித்த எனக்கு
இன்றுதான் தோன்றியது..
உனக்கொரு செல்லப்பெயர்
வைத்தால் என்ன என்று...

இதோ சூடிக்கொள்
என் மடிக் கணினியே....
இன்று முதல் நீ
"உலகச் சுருக்கி"...!

No comments:

Post a Comment