அகரம் தந்தவள் அம்மா... - அதற்கு
ஆகாரம் தந்து வளர்த்தவள் அம்மா...
இதழிலே குறு நகை ஏந்தி...- அன்பு
ஈந்துனைக் காத்த ஏந்திழை அம்மா...
உயிர்தனைத் தாயவள் தந்தாள் - ஊக்கம்
ஊட்டியே உலகத்தில் நடையிடச் செய்தாள்
எழில் தரும் ஆடைகள் சூட்டி - உன்னை
ஏனையோர் புகழ ஏதுவாய்ச் சமைத்தாள்..
ஐம்பதைக் கடந்திடும் பிள்ளை - தாயோ
ஒன்பது வயதினள் போல் பணி செய்வாள்
ஓடுதல் ஆடுதல் குறைந்து - உடல்
ஔவையாய் கூனினும் அன்பிலே உயர்வாள்!
No comments:
Post a Comment